மஹிந்த – மோடி 26இல் விசேட கலந்துரையாடல்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் இடையே எதிர்வரும் 26ஆம் திகதி சனிக்கிழமை விசேட கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வீடியோ ஊடாக இந்தக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது எனவும், இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகக் கலந்துரையாடப்படவுள்ளன எனவும் கூறப்படுகின்றது.

எனினும், அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் பற்றியோ, அரசின் புதிய அரசமைப்பு யோசனை பற்றியோ இதன்போது கலந்துரையாடப்படாது என்றே அறியமுடிகின்றது.

Leave A Reply

Your email address will not be published.