யாழில் கட்டடம் அமைக்க கிடங்கு வெட்டியபோது சிக்கியது கைக்குண்டு.

யாழ்ப்பாணத்தில் கட்டடம் அமைப்பதற்கு இன்று கிடங்கு வெட்டியபோது கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

யாழ். நாவற்குழியில் அமைந்துள்ள திருவாசக அரண்மனையில் புதிய கட்டடம் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கமைய நிலத்தைத் தோண்டியபோது நிலத்தின் கீழ் கைக்குண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சாவகச்சேரிப் பொலிஸாருக்கும் முறைப்பாடு செய்யப்பட்டது.

மேலும், குண்டுகள் ஏதும் இருக்கலாம் என்ற அச்சம் காரணமாக நிலத்தைத் தோண்டும் பணிகளும் இடைநிறுத்தப்பட்டன.

Leave A Reply

Your email address will not be published.