கெஹலியவின் பிணை ரத்து… விசாரணை முடியும் வரை விளக்கமறியல்!

தரமற்ற நோய் எதிர்ப்பு மருந்துகளை கொள்வனவு செய்ததில் அரசாங்க நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேரின் பிணை கோரிக்கைகளை நிராகரிக்க மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் இன்று (மார்ச் 14) உத்தரவிட்டுள்ளது.

இதன்படி வழக்கு விசாரணை முடியும் வரை பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் லோச்சனி அபேவிக்ரம பிறப்பித்த பிணை உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிணை உத்தரவை அறிவித்த நீதவான், இந்த சந்தேகநபர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பொதுச் சொத்து சட்டத்துடன் தொடர்புடையவை என்பதை நீதிமன்றம் ஏற்றுக்கொள்வதாக குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.