பாராளுமன்றத்தை கலைக்க 113 உறுப்பினர்களின் கையொப்பங்களை சேகரிக்கும் ஆளும் கட்சி !

பாராளுமன்றத்தை கலைப்பதற்கு 113 எம்.பிக்களது கையொப்பங்களை சேகரிக்கும் நடவடிக்கையை ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழுவொன்று ஆரம்பித்துள்ளதாக டலஸ் அழகப்பெரும எம்.பி தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும இதனைத் தெரிவித்தார்.

“அரசாங்கத்தின் ஒரு குறிப்பிட்ட குழு பாராளுமன்றத்தைக் கலைக்கும் வேலைத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளது. சிலர் எங்களிடம் தனிப்பட்ட முறையில் பேசினர். ”

“தேவைப்பட்டால், ஜனாதிபதி இன்று நள்ளிரவு 12 மணிக்கு கூட பாராளுமன்றத்தை கலைக்கலாம். ”

“பாராளுமன்றத்தைக் கலைக்கும் கோரிக்கையில் 113 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டால், சபாநாயகர் கண்டிப்பாக நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டும்.”

Leave A Reply

Your email address will not be published.