கோப் குழுவிலிருந்து இதுவரை 10 எம்.பிக்கள் விலகல்!

கோப் எனப்படும் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவிலிருந்து இன்று 3 பேர் விலகியுள்ளனர்.

இந்தநிலையில், அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவிலிருந்து இதுவரையில் 10 பேர் விலகியுள்ளனர்.

அதற்கமைய நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன நேற்றுமுன்தினமும், நாடாளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, சரித்த ஹேரத், இரா.சாணக்கியன், ஹேஷா விதானகே, காமினி வலேபோட, எஸ்.எம். மரிக்கார் ஆகியோர் நேற்றும், நாடாளுமன்ற உறுப்பினர்களான வசந்த யாப்பா பண்டார, துமிந்த திஸாநாயக்க, அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் இன்றும் கோப் குழுவின் பதவிகளிலிருந்து விலகியுள்ளனர்.

அந்தக் குழுவின் புதிய தலைவராக ரோஹித அபேகுணவர்தன நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே அவர்கள் தமது பதவிகளை இராஜிநாமா செய்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.