பஸில் தலைமையில் மொட்டுவின் முக்கிய மூன்று கூட்டங்கள் இன்று.

ஆளும் கட்சியின் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய மூன்று கூட்டங்கள் இன்று நடைபெறவுள்ளன.

பொதுஜன பெரமுனவின் நிறுவுநர் பஸில் ராஜபக்ஷ தலைமையிலேயே இந்தக் கூட்டங்கள் இடம்பெறவுள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் முதல் சந்திப்பும், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களுடன் இரண்டாவது சந்திப்பும், தொழிற்சங்க பிரமுகர்களுடன் மூன்றாவது சந்திப்பும் நடைபெறவுள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அடுத்த கட்ட அரசியல் செயற்பாடுகள் மற்றும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.