போதைப்பொருள் கடத்தல்: ஜாபர் சாதிக் காவல் நீட்டிப்பு.

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் உள்ளிட்ட 5 பேரின் நீதிமன்ற காவல் ஏப்., 16 வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பு போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கடந்த மார்ச் 9ம் தேதி டில்லியில் கைது செய்தனர். அவரின் கூட்டாளிகள் சதா, முகேஷ், முஜிபுர் ரகுமான், அசோக் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

அவர்களின் நீதிமன்ற காவல் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து டில்லியின் பாட்டியாலா நீதிமன்றத்தில் 5 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி 5 பேரின் காவலை ஏப்.,16 வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.