வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் பலி!

வவுனியா- செட்டிகுளம், வாழவைத்தகுளம் பகுதியில் இடம்பெற்ற பட்டா – மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளார் என்று செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்தனர்.

மன்னார் – மதவாச்சி பிரதான வீதியில் செட்டிகுளம், வாழவைத்தகுளம் பகுதியிலுள்ள எரிபொருள் நிலையத்துக்கு அண்மித்த பகுதியில் நேற்று (06.04) இரவு பயணித்த மோட்டார் சைக்கிளும், பட்டா ரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த 21 வயதுடைய மோட்டார் சைக்கிள் சாரதியான அல்முதீன் மிஹ்ராஜ் என்ற இளைஞர் செட்டிகுளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதும் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

சம்பவ இடத்துக்குச் சென்ற செட்டிகுளம் போக்குவரத்துப் பொலிஸார், விபத்துச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.