சஜித் மற்றும் அனுரவின் பட்டப்படிப்புகளை நாட்டுக்கு அறிவிக்க வேண்டும் : நவின் திஸாநாயக்க.

நாட்டின் ஜனாதிபதியாக வருவதற்கு குறைந்த பட்சம் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்பது தான் எனது கருத்து என சப்ரகமுவ மாகாண ஆளுநர் முன்னாள் அமைச்சர் நவின் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஜனாதிபதியாக இருக்க குறைந்தபட்சம் இளங்கலை பட்டமாவது பெற்றிருக்க வேண்டும் என்பது எனது கருத்து.

அரசு ஊழியரை பணியமர்த்த குறைந்தபட்சம் பட்டப்படிப்பு அவசியம்.

எதிர்கால ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்ட பட்டம் பெற்றவர்.

சஜித் பிரேமதாச மற்றும் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோரது பட்டங்களை நாட்டுக்கு காட்டுமாறு அன்புடன் அழைக்கிறேன். ஏனெனில் அதனை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நவின் திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.