நோய் குணப்படுத்தும் சிகிச்சை மையத்திற்கு சென்ற பெண் திடீர் மரணம்!

மதுரங்குளிய – முக்குதொடுவாவ பிரதேசத்தில் உள்ள நோய் குணப்படுத்தும் நிலையமொன்றில் சிகிச்சைக்காகச் சென்ற பெண் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக நேற்று உயிரிழந்துள்ளார்.

முந்தல் – வில்பொத்த பகுதியைச் சேர்ந்த 58 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மத்திய கிழக்கில் நீண்டகாலமாக வீட்டுப் பணியாளராகப் பணிபுரிந்த அவர் அண்மையில் இலங்கைக்குத் திரும்பியுள்ள நிலையில், இந்த பெண் மனநலக் கோளாறுக்கு சிகிச்சை பெறுவதற்காக இந்த நிலையத்திற்குச் சென்றுள்ளார்.

அங்கு அவளுக்கு நிறைய தண்ணீர் குடிக்க கொடுக்கப்பட்டு, அப்போது ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக புத்தளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் இறந்த நிலையில், பிரேத பரிசோதனை இன்று நடைபெற உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.