E-Visa அமைப்பு பற்றி VFS Global வெளியிட்டுள்ள அறிவிப்பு

பண்டாரநாயக்க விமான நிலையத்தில் E-Visa முறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் எழுந்துள்ள கலந்துரையாடல் தொடர்பில் VFS Global நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிவிப்பில், VFS குளோபல் நிறுவனம் 2004 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் இயங்கி வருவதாக சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கிடையில், தமது நிறுவனம் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, சுவிட்சர்லாந்து, நோர்வே, ஆஸ்திரியா, லாட்வியா, ஹங்கேரி, குரோஷியா, மால்டா மற்றும் கிரீஸ் உள்ளிட்ட 23 நாடுகளுக்கான விசா விண்ணப்பங்களைத் தயாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் 6 விசா மையங்களை VFS Global நிறுவனம் நடத்தி வருவதாகவும் , அந்த நிலையங்களில் 123 இலங்கையர்கள் பணிபுரிவதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2004 ஆம் ஆண்டு முதல், அவர்கள் 3.2 மில்லியனுக்கும் அதிகமான விசா விண்ணப்பங்களுக்கான சேவைகளை வழங்கியுள்ளனர்.

இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தத் தொடங்கியுள்ள புதிய E-Visa முறைமைக்காக குடிவரவுத் திணைக்களம் அதன் VFS Global நிறுவனத்திற்கு மேலதிகமாக GBS தொழில்நுட்ப சேவைகள் மற்றும் IVS Global FZCO நிறுவனங்களுடன் முத்தரப்பு உடன்படிக்கையில் ஈடுபட்டுள்ளதாக நிறுவனம் தனது அறிவிப்பில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. .

* VFS குளோபல் அதன் அறிவிப்பில் விசா விண்ணப்ப செயல்முறையின் நிர்வாக மற்றும் தீர்ப்பு அல்லாத செயல்பாடுகளை நிர்வகிப்பதில் மட்டுமே அவர்களின் பங்கு இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.

* கூடுதலாகவிசா வழங்குவது அல்லது மறுப்பது என்பது குடிவரவுத் துறையிடம் மட்டுமே உள்ளது என VFS குளோபல் நிறுவனம் தனது அறிவிப்பில் மேலும் குறிப்பிட்டுள்ளது,

VFS குளோபல் நிறுவனம் மூலம் தாய்லாந்து, துபாய், அஜர்பைஜான், எக்குவடோரியல் கினியா மற்றும் சுரினாம் உள்ளிட்ட 12 நாடுகளில் இந்த புதிய இ-விசா முறை அமல்படுத்தப்படும் என அறிவிப்பில் இறுதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave A Reply

Your email address will not be published.