மாங்கேணி கடலில் மூழ்கி ஒருவர் சாவு!

மட்டக்களப்பு, வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள மாங்கேணி கடலில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது என்று வாகரைப் பொலிஸார் தெரிவித்தனர்.

மாங்கேணியைச் சேர்ந்த 41 வயதுடைய அனஸ்டன் ஹாரலஸ் அலேசியஸ் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் வாழைச்சேனை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.