ஜூலை 5 ஆம் தேதி ஏழை குடும்பங்களுக்கு வங்கி கணக்கில் ரூ.8500 – அதிரடியாக அறிவிப்பு வெளியிட்ட ராகுல் காந்தி

இந்தியா கூட்டணி ஜூன் 4-ஆம் தேதி வென்று ஆட்சி அமைத்தால், ஜூலை 5-ஆம் தேதி ஏழை குடும்பங்களின் வங்கிக் கணக்கில் 8500 ரூபாய் வரவு வைக்கப்படும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார்.

பீகார் மாநிலத்தில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, நாட்டில் உள்ள ஏழை குடும்பங்களின் பட்டியல் தயார் செய்யப்படும் என்றார். ஜூன் 4-ஆம் தேதி இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் என நம்பிக்கை தெரிவித்த ராகுல் காந்தி, ஜூலை 5-ஆம் தேதி கோடிக்கணக்கான ஏழை பெண்களின் வங்கிக் கணக்குகளில் 8500 ரூபாய் வரவு வைக்கப்படும் என தெரிவித்தார். இது ஒரு புரட்சிகரமான திட்டம் என்றும், உலகில் வேறு எந்த அரசும் இதுபோன்ற முயற்சியை மேற்கொண்டதில்லை எனவும் ராகுல் காந்தி குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், தன்னை பரமாத்மா அனுப்பியதாக பிரதமர் மோடி கதை புனைந்துள்ளதாகவும், தேர்தலுக்குப் பிறகு அமலாக்கத்துறை கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூற முடியாது என்பதால் இவ்வாறு பேசுவதாகவும் கூறினார். மேலும், இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால், அக்னிவீர் திட்டத்தை ரத்து செய்து குப்பையில் எறிவோம் எனவும் ராகுல் காந்தி ஆவேசமாக குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.