G.E.C சாதாரண தர பெறுபேறுகள் வெளியிடப்படும் காலம்.

மே மாதம் 15ஆம் திகதியுடன் முடிவடைந்த G.E.C சாதாரண தர பெறுபேறுகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வெளியிடப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சைகள் மே மாதம் 6 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் 3,527 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றன.

பரீட்சை எழுதிய, 452,979 விண்ணப்பதாரர்ககளில் 387,648 பேர் பள்ளி விண்ணப்பதாரர்கள் மற்றும் 65,331 பேர் தனியார் விண்ணப்பதாரர்கள் என பரீட்சை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.