இரு MPகளிடையே மோதல் : மஹிந்தானந்த தாக்கி குணதிலக்க வைத்தியசாலையில் அனுமதி

இன்று பிற்பகல் இடம்பெற்ற ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டத்தின் முடிவில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கண்டி மாவட்டத்தில் உள்ள ஒருங்கிணைப்புக் குழு தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஷவின் இடுப்பு பகுதியில் சில பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் ராஜபக்ஷவும் தலையிட்டு மோதலை சமரசம் செய்து நிறுத்தியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.