IMF பிரீமியத்திற்கு சமமான தொகையுடன் , இலங்கை வரும் ஆஸ்திரேலியா பெட்ரோலியம்.

இலங்கையில் சுமார் 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்ய யுனைட் பெட்ரோலியம் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளதாக யுனைட் பெட்ரோலியம் லங்கா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி பிரபாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை சந்தைக்கு பெற்றோலிய பொருட்களை வழங்குவதற்கு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுக்கு இடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக 2024 ஆம் ஆண்டு ஜூன் 4 ஆம் திகதி யுனைடெட் பெட்ரோலியம் லங்கா பிரைவேட் லிமிடெட் முதலீட்டுச் சபையுடன் (BOI) உடன்படிக்கை ஒன்றை மேற்கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்தார்.

“யுனைடெட் பெட்ரோலியம் லங்கா பிரைவேட் லிமிடெட்” என்பது யுனைடெட் பெட்ரோலியம் அவுஸ்திரேலியா பிரைவேட் லிமிடெட் இலங்கையில் தனது நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இணைக்கப்பட்ட ஒரு நிறுவனமாகும்.

United Petroleum Australia Pty Ltd என்பது ஆஸ்திரேலியாவின் முன்னணி பெட்ரோலிய வர்த்தக நிறுவனமாகும், இது ஆஸ்திரேலிய துணைக் கண்டம் முழுவதும் 500 பெட்ரோல் நிலையங்களைக் கொண்டுள்ளது. யுனைடெட் குழுமம் ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூரில் வேறு பல வணிகங்களைக் கொண்டுள்ளது, மேலும் நிறுவனம் ஆஸ்திரேலியாவுக்கு வெளியே தனது சில்லறை பெட்ரோலிய வணிகத்தை விரிவுபடுத்துவது இதுவே முதல் முறை. யுனைடெட் நிறுவனம் தரம், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் நட்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.

United Petroleum Australia Pty Ltd நிறுவனத்திற்கு இலங்கையில் உள்ள 150 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான எரிபொருள் விநியோக உரிமை வழங்கப்பட்டுள்ளது. மேலும் யுனைடெட் உரிமையின் கீழ் 50 புதிய பெட்ரோல் நிலையங்களை நிர்மாணிக்கும் உரிமையும் உள்ளது.

முதலீட்டுச் சபையின் சார்பில் முதலீட்டுச் சபையின் தலைவர் தினேஷ் வீரக்கொடியும், யுனைடெட் பெட்ரோலியம் லங்கா பிரைவேட் லிமிடெட் சார்பில் கலாநிதி பிரபாத் சமரசிங்கவும் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.