ஆற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட மாணவியின் பிரேத பரிசோதனை இன்று!

நானுஓயா- டெஸ்போட் ஆற்றிலிருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்ட மாணவியின் பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.

நுவரெலியா- நானுஓயாவில் மர்மமான முறையில் உயிரிழந்த 15 வயதுடைய பாடசாலை மாணவியொருவரின் சடலம், அப்பகுதியிலுள்ள ஆற்றொற்றில் இருந்து நேற்று கண்டெடுக்கப்பட்டது.

நானுஓயா- எபஸ்போட் தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி பயின்ற, டெஸ்போட் தோட்டத்தில் கீழ்பிரிவில் வசித்த மகேந்திரன் யசோதா என்ற மாணவியே இவ்வாறு சடலமாக நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

குறித்த மாணவி, நேற்று முன்தினம் இரவு, 10.30 மணிவரை கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததாகவும் நள்ளிரவு 1.50 மணியளவில் அவரை காணவில்லை

எனவும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து மாணவியை தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையிலேயே நேற்று, வீட்டுக்கு அருகில் உள்ள ஆற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

இந்நிலையில் உயிரிழந்த மாணவியின் பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மாணவி உயிரிழந்தமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.