கடற்தொழிலுக்குச் செல்லும் மீனவர்களைப் பதிவு செய்ய நடவடிக்கை.

குடாநாட்டில் கடற்தொழிலுக்குச் செல்லும் 
மீனவர்களைப் பதிவு செய்ய நடவடிக்கை

இலங்கையில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்‌து வரும் நிலையில் கடலுக்குச் செல்லும் மீனவர்கள் இந்திய மீனவர்களுடனான தொடர்புகளை மேற்கொண்டு வருகின்றமை அவதானிக்கப்படும் வகையில் யாழ். மாவட்டத்தில் தொழிலுக்குச் செல்லும் மீனவர்களைக் கடலுக்குள் செல்லும் நேரம், கரைசேரும் நேரம் என்பவற்றை பதிவு செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொரோனாத் தாக்கத்தில் இருந்து பொதுமக்களைப் பாதுகாப்பதற்கான விசேட கூட்டம் தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் இன்று நடைபெற்றபோதே இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் கடலுக்குச் செல்லும் மீனவர்களின் விபரங்களும் அவர்கள் சென்று திரும்பும் நேரங்களும் கையொப்பத்துடன் பெறுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த நடவடிக்கையானது தேவைக்கேற்றபடி மாற்றங்கள் செய்யமுடியும் எனவும் வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.