முல்லைத்தீவில் மேலும் 20 பேருக்கு கொரணா தொற்று.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

கம்பஹா – மினுவாங்கொட ஆடை தொழிற்சாலையில் பணியாற்றியவர்கள், அவர்களுடைய உறுவினர்கள் என 220 பேர் முல்லைத்தீவில் 59வது படைப்பிரிவு பயிற்சி முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். அவர்களுக்கு பகுதி பகுதியாக பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற பரிசோதனையில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், இன்றைய தினம் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 7 பெண்கள், 7 ஆண்கள் மற்றும் 6 சிறுவர்கள் அடங்கலாக 20 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர்களை சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.