அதி ஆபத்து நிலை தோன்றினால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு.

அதி ஆபத்து நிலை தோன்றினால்
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு

– இராணுவத் தளபதி தெரிவிப்பு

நாட்டின் எந்தவொரு பகுதியிலும் கொரோனா அதி ஆபத்து நிலை தோன்றினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு ஊரடங்குச் சட்டத்தை அமுல் செய்வதைத் தவிர்க்க முடியாதுபோகும் என்று இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

ஏற்கனவே அதி ஆபத்து என்று கருதப்பட்ட பிரதேசங்களில் ஊரங்குச் சட்டம் அமுல் செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நேற்று மாத்திரம் 68 பேர் கொரோனாத் தொற்றுடன் கண்டறியப்பட்டனர். இவர்களில் 22 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தும், 46 பேர் தொற்றாளிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தும் கண்டறியப்பட்டனர். மினுவாங்கொடை, கட்டுநாயக்க மற்றும் கம்பஹா பகுதிகளில் இருந்தே இவர்கள் கண்டறியப்பட்டனர்.

இதேவேளை, கொழும்பில் இருந்து இரண்டு தொற்றாளிகளும், வத்தளை மற்றும் கந்தானையில் இருந்தும் தொற்றாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்” – என்றார்

Leave A Reply

Your email address will not be published.