தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையைப் பிரிட்டன் அரசு நீடிக்கும் பிரதமர் மஹிந்த

தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான
தடையைப் பிரிட்டன் அரசு நீடிக்கும்
பிரதமர் மஹிந்த அதீத நம்பிக்கை

“தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை பிரிட்டன் அரசு தொடர்ந்தும் பேணி வரும் நம்புகின்றேன்.”

இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான பிரிட்டனின் தடை தவறானது எனப் பிரிட்டன் தடைசெய்யப்பட்ட அமைப்புக்கள் மேன்முறையீட்டு ஆணைக்குழு நேற்றுமுன்தினம் தீர்ப்பு வழங்கியிருந்தது.

இந்தநிலையில், இது குறித்து நேற்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தனது ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“இலங்கையானது தமிழீழ விடுதலைப்புலிகளைத் தோற்கடித்து அதன் மிருகத்தனமான பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. ஆனால், தமிழீழ விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகள் உலகம் முழுவதும் மிகவும் சுதந்திரமான செயற்பாட்டில் உள்ளன. அத்துடன், இவை எந்தவொரு நாட்டின் தேசிய பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாகவே இருக்கின்றன.

இந்தநிலையில், தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையைப் பிரிட்டன் அரசு தொடர்ந்தும் பராமரிக்கும் என நம்புகின்றேன்” – என்றுள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான பிரிட்டனின் தடைக்கு எதிராக நாடு கடந்த தமிழீழ அரசால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் குறித்த வழக்கின் தீர்ப்பு நேற்றுமுன்தினம் வெளியாகியிருந்தது.

“தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான பிரிட்டனின் தடை தவறானது” எனப் பிரிட்டன் தடைசெய்யப்பட்ட அமைப்புக்கள் மேன்முறையீட்டு ஆணைக்குழு தீர்ப்பளித்துள்ளது. அத்துடன், பிரிட்டன் அரசுக்கும் இறுதி முடிவுக்காகப் பரிந்துரைத்துள்ளது.

அதனடிப்படையில், குறித்த தீர்ப்பை அடுத்து பிரிட்டன் அரசின் முடிவு அடுத்த சில வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இலங்கை அரச தரப்பிலிருந்து இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்தி:

தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான
தடையைப் பிரிட்டன் அரசு நீடிக்கும்

– பிரதமர் மஹிந்த அதீத நம்பிக்கை

“தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை பிரிட்டன் அரசு தொடர்ந்தும் பேணி வரும் நம்புகின்றேன்.”

– இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான பிரிட்டனின் தடை தவறானது எனப் பிரிட்டன் தடைசெய்யப்பட்ட அமைப்புக்கள் மேன்முறையீட்டு ஆணைக்குழு நேற்றுமுன்தினம் தீர்ப்பு வழங்கியிருந்தது.

இந்தநிலையில், இது குறித்து நேற்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தனது ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“இலங்கையானது தமிழீழ விடுதலைப்புலிகளைத் தோற்கடித்து அதன் மிருகத்தனமான பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. ஆனால், தமிழீழ விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகள் உலகம் முழுவதும் மிகவும் சுதந்திரமான செயற்பாட்டில் உள்ளன. அத்துடன், இவை எந்தவொரு நாட்டின் தேசிய பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாகவே இருக்கின்றன.

இந்தநிலையில், தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையைப் பிரிட்டன் அரசு தொடர்ந்தும் பராமரிக்கும் என நம்புகின்றேன்” – என்றுள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான பிரிட்டனின் தடைக்கு எதிராக நாடு கடந்த தமிழீழ அரசால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் குறித்த வழக்கின் தீர்ப்பு நேற்றுமுன்தினம் வெளியாகியிருந்தது.

“தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான பிரிட்டனின் தடை தவறானது” எனப் பிரிட்டன் தடைசெய்யப்பட்ட அமைப்புக்கள் மேன்முறையீட்டு ஆணைக்குழு தீர்ப்பளித்துள்ளது. அத்துடன், பிரிட்டன் அரசுக்கும் இறுதி முடிவுக்காகப் பரிந்துரைத்துள்ளது.

அதனடிப்படையில், குறித்த தீர்ப்பை அடுத்து பிரிட்டன் அரசின் முடிவு அடுத்த சில வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இலங்கை அரச தரப்பிலிருந்து இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.