எதிரணியில் 6 முஸ்லிம்கள் உட்பட 8 பேர் ’20’ இற்கு இன்று நேசக்கரம்

எதிரணியில் இருந்து 8 பேர் அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக இன்று வாக்களித்தனர்.

ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் நால்வரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் இருவரும் 20′ ஐ ஆதரித்து வாக்களித்துள்ளனர்.

அதேவேளை, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் உயர்பீட உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அ.அரவிந்தகுமாரும் 20ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகேவும் 20 ஐ ஆதரித்துள்ளார்.

20ஐ ஆதரித்த எதிரணி உறுப்பினர்களின் விபரம் வருமாறு:-

ஹாபீஸ் நஸீர் அஹமட் (ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்), ஏ.ஏ.எஸ்.எம். ரஹீம் (அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்), பைசல் காசீம் (ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்), டயானா கமகே (ஐக்கிய மக்கள் சக்தி), எச்.எம்.எம்.ஹரீஸ் (ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்), இஷாக் ரஹ்மான் (அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்), அ.அரவிந்குமார் (தமிழ் முற்போக்குக் கூட்டணி), எம்.எஸ். தௌஃபீக் (ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்)

Leave A Reply

Your email address will not be published.