கொழும்பு உள்ளிட்ட பல உள்ளூராட்சி மன்றங்களுக்கான இடைக்கால தடை நீக்கம்

கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட 18 உள்ளூராட்சி மன்றங்களுக்கு எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதைத் தடுக்கும் வகையில் விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை நீக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (11) உத்தரவிட்டது.
அந்த உள்ளூராட்சி மன்றங்களுக்காக தாக்கல் செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.
சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்த பின்னர், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் மொஹமட் லஃபார் தாஹிர் மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழு இந்த உத்தரவை பிறப்பித்தது.