லொறி விபத்தில் இளைஞர் சாவு!

குருநாகல் – தம்புள்ளை வீதியில் தம்படவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவன் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர் என்று தொரட்டியாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.
தம்புள்ளையிலிருந்து குருநாகல் நோக்கிப் பயணித்த லொறி ஒன்று குருநாகலில் இருந்து தம்புள்ளை நோக்கிப் பயணித்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின்போது, தம்புள்ளையில் இருந்து குருநாகல் நோக்கிப் பயணித்த லொறியில் இருந்த இளைஞர் ஒருவன்
சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.