யாழில் நீதி கோரி ஊடகவியலாளர்கள் போராட்டம்!

ர்வதேச ஊடக சுதந்திர தினத்தையொட்டி படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்கள் இன்று போராட்டத்தை முன்னெடுத்தனர்.

யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் ஊடக அமையத்துக்கு முன்பாக மாலை 3 மணியளவில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது படுகொலை செய்ப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரியும், தாக்குதலுக்கு இலக்கான ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கு நீதி கோரியும் ஊடகவியலாளர்கள் கோஷங்களை எழுப்பினர்.

Leave A Reply

Your email address will not be published.