யாழில் 11 பேருக்கு இன்றைய சோதனையில் தொற்றில்லை

யாழ்ப்பாணம் மாநகரில் இன்று பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொண்ட 11 பேருக்கும் கொரோனாத் தொற்று இல்லை எனக் கண்டறியப்பட்டுள்ளது.

வடக்கில் நேற்று மேற்கொண்ட பி.சி.ஆர். பரிசோதனையில் 8 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டது. இவ்வாறு உறுதி செய்யப்பட்டவர்கள் அனைவரும் கொழும்பில் இருந்து வந்தவர்களாகவும், பேலியகொட கொத்தணியுடன் தொடர்புடையவர்களாகவும் இருக்கின்றனர்.

இவர்களுடன் தொடர்புபட்ட 11 பேருக்கு இன்று மேற்கொண்ட பி.சி.ஆர். பரிசோதனையிலேயே எவருக்கும் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.