சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி திருகோணமலையில் உறவுகள் கவனவீர்ப்பு.
வடக்கு – கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி இன்று சனிக்கிழமை திருகோணமலை சிவன் கோயில் முன்பாகக் கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதில் பங்கேற்றவர்கள் தமிழின அழிப்புக்குச் சர்வதேச நீதி வேண்டும் எனக் கோரும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர்.


