இந்திய ரயில்வேயின் புதிய அறிவிப்பு: ‘ரயில் நீர்’ பாட்டில் விலை குறைப்பு!

இந்திய ரயில்வே பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

GST சீரமைப்புகளின் பயன்களை பயணிகளுக்கு வழங்கும் நோக்கில், ரயில்களில் மற்றும் ரயில்வே நிலையங்களில் விற்பனை செய்யப்படும் குடிநீர் போத்தல்களின் விலை குறைக்கப்படுவதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

ரயில் நீர் (Rail Neer) என்ற IRCTC-யின் பிரபலமான 1 லிட்டர் குடிநீர் போத்தலின் அதிகபட்ச விலை ரூ.15-ல் இருந்து ரூ.14-ஆக குறைக்கப்பட்டுள்ளது.

அதேபோல், 500 மில்லி போத்தலின் விலை ரூ.10-லிருந்து ரூ.9-ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விலை செப்டம்பர் 22 முதல் அமுலுக்கு வரும் என ரயில்வே அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த விலை குறைப்பு IRCTC மற்றும் ரயில்வே அங்கீகரிக்கப்பட்ட பிற பிராண்டுகளின் குடிநீர் போத்தல்களுக்கும் பொருந்தும்.

Leave A Reply

Your email address will not be published.