கர்ப்பிணித் தாய்மார்கள் 80 பேருக்குக் கொரோனா.

கர்ப்பிணித் தாய்மார்கள்
80 பேருக்குக் கொரோனா

நாட்டில் கொரோனா வைரஸின் மூன்றாவது அலையில் 80 இற்கும் மேற்பட்ட கர்ப்பிணித் தாய்மார் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று வைத்தியர் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொரோனாத் தொற்றுக்குள்ளான கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சிகிச்சையளிப்பதற்காகக் கொழும்பு கிழக்கு வைத்தியசாலையில் விசேட சிகிச்சை நிலையம் நிறுவப்பட்டுள்ளது எனவும் சுகாதாரப் பிரிவு அறிவித்துள்ளது.

இதுவரையில் 28 கர்ப்பிணிகள் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர் எனவும், அதேவேளை 4 கர்ப்பிணிப் பெண்கள் கொரோனாத் தொற்றுடன் குழந்தைகளைப் பிரசவித்துள்ளனர் எனவும் சுகாதாரப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.