நல்லூரில் நாளை மாவீரர்களுக்கு நினைவாலயம்.

மாவீரர்களின் நினைவாக யாழ். நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள மாவீரர்களின் நினைவாலயம் நாளை வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளது.

தாயக மண்ணின் விடியலுக்காக வித்தாகிப் போனவர்களுடன், தாயக மண்ணுக்காகத் தம்மை அர்ப்பணித்த மாமனிதர்களையும், நாட்டுப் பற்றாளர்களையும் ஆவணப்படுத்தும் வகையிலேயே மாவீரர்களின் நினைவாலயம் இம்முறை அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.