ஜோன்ஸ்டனும் இளைய மகனும் விளக்கமறியலில்!

சதொச நிறுவனத்துக்குச் சொந்தமான வாகனத்தைத் துஷ்பிரயோகம் செய்தனர் என்று கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இளைய மகன் ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக இன்று வத்தளை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவர்களை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அமைச்சராக இருந்த காலப்பகுதியில் சதொச நிறுவனத்துக்குச் சொந்தமான வாகனத்தை உத்தியோகபூர்வமற்ற முறையில் பயன்படுத்தியமை மற்றும் அதன் மூலம் அரசுக்கு நட்டத்தை ஏற்படுத்தியமை தொடர்பில் அவர்கள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக நிதிக் குற்ற விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்ட நிலையில் அவர்கள் இன்று கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக, இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மற்றொரு மகனான ஜொஹான் பெர்னாண்டோ மற்றும் சதொச நிறுவனத்தின் போக்குவரத்துப் பிரிவின் முன்னாள் முகாமையாளர் ஆகியோரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.