உ.பி-யில் கொடூரம்: பெண் ஆசிரியையின் உதடுகளைத் துண்டித்த 12-ஆம் வகுப்பு மாணவன்!

இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் மெயின்புரியில், 12 ஆம் வகுப்பு மாணவன் ஒருவர் தனது ஆசிரியையை கூர்மையான ஆயுதத்தால் தாக்கி அவரது உதடுகளை துண்டித்த சம்பவம் பெரும் அதிர்ர்ச்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவர் தனது ஆசிரியையை கூர்மையான ஆயுதத்தால் தாக்கி, அவரது இரண்டு உதடுகளையும் துண்டித்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மாணவனின் செயலால் மனமுடைந்த ஆசிரியை
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட ஆசிரியையின் சகோதரர் அளித்துள்ள முறைப்பாட்டின்படி, ஆக்ரா வீதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பணிபுரிந்த அந்த ஆசிரியையை , மாணவன் நீண்டகாலமாகத் துன்புறுத்தி வந்துள்ளார்.

இது குறித்து பெற்றோர் – ஆசிரியர் சந்திப்பின் போது மாணவனின் தாயிடம் முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்தது. மாணவனின் தாய் தனது மகனின் நடத்தை மாறும் என உறுதியளித்த போதிலும், அந்த மாணவனின் தொல்லை நீடித்துள்ளது.

மாணவனின் செயலால் மனமுடைந்த ஆசிரியை, தனது பணியில் இருந்து விலகி வேறொரு பாடசாலையில் வேலைக்குச் சென்றுள்ளார். எனினு , மாணவன் விடாமல் ஆசிரியை வேலை செய்யும் புதிய இடத்தைக் கண்டுபிடித்து, தினமும் அவரைப் பின்தொடர்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் அண்மையில் ஆசிரியை வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது வழியில் மறித்த அந்த மாணவன், மறைத்து வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தால் ஆசிரியையைத் தாக்கி அவரது இரண்டு உதடுகளையும் துண்டித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் தலைமறைவாக உள்ள மாணவனைத் தேடி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.