கண்டி மாவட்டத்தில் 63 பேருக்கு தொற்று – 900 குடும்பங்கள் தனிமைப்படுத்தல்

கண்டி மாவட்டத்தில்
63 பேருக்கு தொற்று

– 900 குடும்பங்கள் தனிமைப்படுத்தல்

கண்டி மாவட்டத்தில் மாத்திரம் இதுவரை 63 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று கண்டி மாவட்ட அரச அதிபர் சந்தன தென்னக்கோன் இன்று (11) தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கண்டி மாவட்ட பிரதேச செயலகப் பிரிவில் மட்டும் 20 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். தற்போதைய நிலையில் 900 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அனைத்து பிரதேச சுகாதார சேவை பணிப்பாளர்கள், அதேபோன்று பொலிஸ், இராணுவம் மற்றும் பிரதேச செயலாளர்கள் இணைந்து குழுவொன்றை அமைத்து கொரோனா வைரஸ் மேலும் பரவாமலிருக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.