யாழில் முடக்கல் நிலை நீக்கப்பட்டாலும் மக்கள் சுகாதார நடைமுறையை பின்பற்றுவது மிகவும் அவசியம்

யாழில் முடக்கல் நிலை நீக்கப்பட்டாலும்

மக்கள் சுகாதார நடைமுறையை
பின்பற்றுவது மிகவும் அவசியம்

மாவட்ட அரச அதிபர் மகேசன் வேண்டுகோள் 

“முடக்க நிலை நீக்கப்பட்டாலும் அப்பகுதி மக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி செயற்படுவது அவசியமானது.”

– இவ்வாறு யாழ். மாவட்ட அரச அதிபரும் மாவட்ட கொரோனா ஒழிப்பு செயலணியின் தலைவருமான க.மகேசன் தெரிவித்தார்.

இன்று (11) யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மூன்று கிராமங்கள் (இராஜகிராமம், குருநகர் மற்றும் திருநகர்) தனிமைப்படுத்தலிருந்து விடுவிக்கப்பட்டமை தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“யாழ். மாவட்டத்தில் கொரோனா அச்சம் காரணமாக முடக்கப்பட்டிருந்த மூன்று கிராமங்கள் இன்று காலையிலிருந்து முடக்கல் நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. எனினும், குறித்த பகுதி மக்கள் சுகாதார நடைமுறைகளைப்  பின்பற்றி சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து தமது அன்றாடச் செயற்பாடுகளை முன்னெடுத்தல் அவசியமாகும்.

மேல் மாகாணம் மற்றும் ஏனைய மாவட்டங்களில் கொரோனாத் தொற்று அதிகரித்துள்ள நிலையில் காணப்படுகின்றது. அந்தநிலையில் தற்போது யாழ். மாவட்டத்தில் கொரோனாத் தொற்று பரவும் அச்சம் காரணமாக சுகாதாரப் பிரிவினரால்  முடக்கப்பட்ட பிரதேசங்கள் முடக்க நிலைலிருந்து விடுவிக்கப்பட்டாலும் தொற்று அச்சம் தொடர்ந்து காணப்படுகின்றது.

எனவே, அப்பகுதி மக்கள்  சுகாதார நடைமுறைகளைச் சரியான முறையில் பின்பற்றுவதன் மூலமே அப்பகுதியிலோ அல்லது வேறு பகுதிகளில் குறித்த தொற்று ஏற்படாதவாறு பாதுகாக்க முடியும்.

அத்துடன் முடக்க நிலையிலிருந்து விடுபட்ட கிராமங்களுக்கு மேல் மாகாணம் அல்லது ஏற்கனவே கொரோனா பாதிப்புள்ள அபாய வலயங்களிலிருந்து புதியவர்கள் யாரும் வந்தால் அவர்கள் கட்டாயமாக சுகாதாரப் பிரிவினரிடம் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.