இலங்கையில் மேலும் ஐவர் கொரணா தொற்றால் மரணம்.

நாட்டில் மேலும் ஐவர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் இருவர் கொழும்பு-13 பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், ஏனையவர்கள், கொழும்பு-14, இரத்மலானை மற்றும் சிலாபத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.