இலங்கை ராமன்ய மகா பீடத்தின் மகாநாயக்க தேரரைச் சந்தித்த அநுர – புத்தாண்டுக்காக விசேட ஆசீர்வாதம்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இலங்கை ராமன்ய மகா பீடத்தின் மகாநாயக்க, அக்கமஹா பண்டித அதிவணக்கத்துக்குரிய மகுலேவே விமல நாயக்க தேரரைச் சந்தித்து சிறிது நேரம் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

அவர் வசிக்கும் மீரிகம, மினியோலுவ, ஸ்ரீ வித்யாவாச பிரிவென மகா விகாரைக்கு நேற்று பிற்பகல் விஜயம் செய்த ஜனாதிபதி, மகாநாயக்க தேரரைச் சந்தித்து நலம் விசாரித்தார்.

இதன்போது மகாநாயக்க தேரர் செத்பிரித் பாராயணம் செய்து, பிறந்துள்ள சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்காக ஜனாதிபதிக்குத் தனது ஆசீர்வாதங்களை வழங்கினார்.

அதிவணக்கத்துக்குரிய மகுலேவே தம்மரத்தன தேரர், கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான தர்மப்பிரிய விஜேசிங்க, சமிந்த லலித் குமார மற்றும் மீரிகம பிரதேச சபையின் தலைவர் சுமின் மஹிந்தலால் உள்ளிட்ட குழுவினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.