திருமலையில் கோர விபத்து! இளைஞர் பரிதாப மரணம்!!

திருகோணமலை, கப்பல்துறை பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

திருகோணமலை, நடேசன் கோயில் அடியில் வசித்து வரும் எஸ். நிரோஜன் (வயது 36) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

இவர் பயணித்த மோட்டார் சைக்கிளும் வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளில் பின்னால் பயணித்த கப்பல்துறை பகுதியைச் சேர்ந்த ஜீவராணி (வயது 47) என்ற பெண் பலத்த காயமடைந்துள்ளார்.

அவரது கை உடைந்த நிலையில், மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த இளைஞரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பாக வான் சாரதியைக் கைது செய்துள்ள சீனக்குடா பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.