139 மேலதிக வாக்குகளால் மேலும் நீடிக்கப்பட்ட அவசரகாலச் சட்டம்.

பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிப்பதற்கான தீர்மானம், நாடாளுமன்றத்தில் 139 மேலதிக வாக்குகளால் நேற்று நிறைவேற்றப்பட்டது.

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நேற்று நாடாளுமன்றம் கூடியபோது, அவசரகாலச் சட்ட நீடிப்பு தொடர்பான விவாதம் இடம்பெற்றது.

விவாதத்தின் இறுதியில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் போது ஆதரவாக 145 வாக்குகளும், எதிராக 6 வாக்குகளும் கிடைத்தன.

எதிராக எதிரணியில் இருந்து 6 வாக்குகள் மாத்திரமே அளிக்கப்பட்டன. எனினும், ஆளும் தரப்பின் பெரும் ஆதரவுடன் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன் மூலம் நாட்டில் அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாத காலத்துக்கு அமுலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.