இனி ஆவின் பால் பாக்கெட் கிடையாது? தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய ஆவின் திட்டம்!
பாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் ஆவின் நிர்வாகம் இன்று (ஜூலை 14) தெரிவித்துள்ளது.
கொடைக்கானல், ஊட்டி மலைப்பிரதேசங்களில் பிளாஸ்டிக் தடையை அமல்படுத்த சோதனை முறையில் தானியங்கி இயந்திரங்கள் நிறுவப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில், நீதிபதிகள் என். சதீஷ் குமார் மற்றும் டி. பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் ஆவின் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், வாடிக்கையாளர்களின் வரவேற்பை மதிப்பிடுவதற்காக, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி ஆகிய இரு இடங்களில் சொதனை அடிப்படையில் தானியங்கி விற்பனை இயந்திரங்கள் நிறுவப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக ரூ.3.60 லட்சம் செலவில் 2 இயந்திரங்கள் வாங்கப்பட உள்ளதாகவும் 2 இயந்திரம் வாங்கி நிறுவிய பின் வீடுகள், உணவகங்களுக்கு பாக்கெட் பால் விற்பனை நிறுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
