பேராதனை பொலிஸ் அதிகாரிகள் ஐவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.

பேராதனை பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஐவருக்கு கொரோனா!

பேராதனை பொலிஸ் அதிகாரிகள் ஐவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பொலிஸ் நிலையத்திலுள்ள அனைத்து பொலிஸ் அதிகாரிகளும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்துவதுடன் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்வாங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக கண்டி பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி சுதத் மாசிங்க நேற்று (19) தெரிவித்தார்.

இது தொடர்பாக பொலிஸ் அதிகாரி கூறுகையில்: பேராதனை பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரி ஒருவருக்கு சமீபத்தில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து அவருடன் கடமை புரிந்த போக்குவரத்து பொலிஸார் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் 28 பேர் கடந்த 17 ஆம் திகதி பீ . சி. ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் இதில் போக்குவரத்து பிரிவின் நான்கு பொலிஸ் அதிகாரிகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது என்றும் அவர் கூறினார்.

இவ்வாறான நிலைமையில், பொலிஸ் நிலையங்களுக்கு வரும் பொலிஸாரினதும் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி பொலிஸ் நிலையங்கள் கிருமி நீக்கம் செய்துள்ளதாகவும் , பொலிஸ் நிலையத்திற்கு வரும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கண்டி பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி சுதத் மாரசிங்க மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.