8 விமானப்படையினர் உட்பட வடக்கில் இன்று 10 பேருக்கு கொரோனா

8 விமானப்படையினர் உட்பட

வடக்கில் இன்று 10 பேருக்கு
கொரோனா தொற்று உறுதி

– வைத்தியர் சத்தியமூர்த்தி தகவல்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 266 பேருக்கு இன்று சனிக்கிழமை பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 10 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

வவுனியா தனிமைப்படுத்தல் நிலையத்திலிருக்கும் விமானப் படையைச் சேர்ந்த 8 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, கிளிநொச்சியில் இருவருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.