நேபாள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இ.தொ.கா. தலைவர் செந்தில் ஆழ்ந்த இரங்கல்!

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான், இலங்கையில் உள்ள நேபாள தூதரகத்துக்கு நேற்று நேரில் சென்று, நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்து, இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

நேபாள பிரதமர் பாலேந்திர ஷாவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இறைவனைப் பிரார்த்திப்பதாகவும், இந்த இக்கட்டான சூழ்நிலையில் நேபாள மக்களுடன் தனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் இணைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேபாளம் எதிர்கொண்டுள்ள இந்தக் கடினமான சூழ்நிலையை விரைவில் கடந்து, பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை மீண்டுமொருமுறை இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும் என்றும் அவர் தனது வாழ்த்துக்களையும் பிரார்த்தனைகளையும் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிரேஷ்ட சட்ட ஆலோசகர் மாரிமுத்து, மேல்மாகாண உப தலைவர் திருக்கேஸ் செல்லசாமி மற்றும் தொழிற்சங்க உப தலைவர் ராஜமணி ஆகியோர் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.