மாவத்தகம பிரதேச செயலாளர் பிரிவில் பல வீதிக்கான அடிக்கல் நாட்டு விழா.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ பதவியேற்று ஒரு வருட நிறைவு தினத்தை முன்னிட்டு  சுமார் 4 கோடி ரூபா செலவில் மாவத்தகம பிரதேச செயலாளர் பிரிவில் சிங்கப்புர பண்டாரகல. கலுகல்ல வீதிக்கான அடிக்கல் நாட்டு விழாவும் விசேட மரம் நடுகையும்  நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ அவர்களின் இணைப்புச் செயலாளர் எம். ஆர். எம். ரசான் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மாவத்தகம பிரதேச சபையின் தவிசாளர்  கமால் பெரேரா, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதான பொறியியலாளர் ஹ{னுகும்புர, மாவத்தகம பிரதேச சபை உறுப்பினர்களான முஹமட் ரிபாழ், மூஆத் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இக்பால் அலி.                              (மாவத்துகம நிருபர்)

Leave A Reply

Your email address will not be published.