கிளிநொச்சி மாவட்ட க.பொ.சாதாரண தரப் பரீட்சை மாணவர்களுக்கு நாளை பாடசாலைகள் ஆரம்பம்.

கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு வாரத்திற்கு இடைநிறுத்தப்பட்ட பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பாக இன்று மாவட்ட அரசாங்கதிபர் தலைமையில் நடைபெற்ற Covid 19 கலந்துரையாடலில் கலந்துரையாடப்பட்டது .
அதன் பிரகாரம் இந்த முறை க.பொ.சாதாரண தரப் பரீட்சைக்கு தொற்றவுள்ள மாணவர்களுக்கு நாளை பாடசாலைகள் ஆரம்பிப்பதாக தீர்மானிக்கப்பட்டது .ஏனைய வகுப்பு மாணவர்களுக்கு ஆரம்பிப்பது தொடர்பாக எதிர்வரும் டிசம்பர் 7ம் திகதி வரும் PCR பரிசோதனையை தொடர்ந்தே முடிவு எட்டப்படும் .

க.பொ.சாதாரண தர மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் பாட நேரங்களில் கட்டாயம் சமூகமளிக்க வேண்டும் ஏனைய வகுப்பு மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்க தேவையில்லை.

Leave A Reply

Your email address will not be published.