பத்திரிகை நிறுவனமொன்றின் ஊழியர்கள் ஆறு பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

முன்னணி பத்திரிகை நிறுவனமொன்றின் ஊழியர்கள் ஆறு பேருக்கு கொரோனா உறுதி!

கொழும்பு நகரில் அமைந்துள்ள இலங்கையின் முன்னணி பத்திரிகை நிறுவனமொன்றின் ஆறு பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த பத்திரிகையின் சிங்கள மற்றும் ஆங்கில பதிப்புக்களில் இருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்ட்டுள்ளது.

ஏனையவர்கள் குறித்த நிறுவனத்தின் போக்குவரத்து மற்றும் தொழில்நுட்ப பிரிவில் கடமையாற்றுபவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த பத்திரிகை நிறுவனத்தில் பணியாற்றும் ஊடகவிலாளர் ஒருவர் கடந்த மாதம் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.