ரஜினிகாந்த்… மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில்! இன்று மீண்டும் கொரோனா பரிசோதனை…!

சூப்பர் ஸ்டாருக்கு நேற்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் நெகட்டீவ் என ரிசல்ட் வந்தது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் கொரோனா பிரச்சனை காரணமாக நிறுத்தப்பட்டிருந்தது. ஜனவரி மாதம் முதல் ரஜினி தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதால் அண்ணாத்த படத்தை முடித்துக் கொண்ட தீர்மானித்தார்.

<p>இதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், &nbsp;நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினர் தனிவிமானம் மூலமாக சென்னை டூ ஐதராபாத் பறந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது. படவேலைகளை விரைவில் முடிக்க தீர்மானித்த ரஜினி தினமும் 14 மணி நேரம் நடித்து வந்தார்.&nbsp;</p>
இதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,  நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினர் தனிவிமானம் மூலமாக சென்னை டூ ஐதராபாத் பறந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது. படவேலைகளை விரைவில் முடிக்க தீர்மானித்த ரஜினி தினமும் 14 மணி நேரம் நடித்து வந்தார்.
இந்நிலையில் படக்குழுவை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து உடனே படப்பிடிப்பை நிறுத்திவிட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.