சித்ராவின் தோழி கங்கா பாணி வெளியிட்ட தகவல்

சித்ரா தற்கொலை விவகாரம் குறித்து இதுவரை உண்மை தகவல் வெளியாகாத நிலையில், சித்ரா திருவான்மியூரில் கட்டி வந்த சொகுசு பங்களா மற்றும் ஆடி கார் குறித்து, சித்ராவின் தோழி கூறியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சித்ரா தற்கொலை குறித்து ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வந்த நிலையில், தற்போது 250 பக்க அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் இதுகுறித்து அனைவரிடமும் விசாரணை நடைபெறும் என தெரிகிறது.

சித்ராவின் தோழி கங்கா பாணி என்பவர்… சித்ரா தற்போது திருவான்மியூரில் கட்டி வந்த சொகுசு பங்களா மற்றும் அவர் சமீபத்தில் வாங்கிய ஆடி கார் போன்றவை சித்ரா மீது கண் வைத்திருந்த விஐபி மகன் ஒருவரின் செல்வாக்கால் தான் சித்ரா வாங்கியதாக கூறி பகீர் கிளப்பியுள்ளார்.

இதுகுறித்து ஏற்கனவே ஹேம்நாத்தின் தந்தை, கமிஷ்னர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் சித்ரா மூன்று பேரை காதலித்துள்ளதாகவும், அதில் ஒரு சில காதல் திருமணம் வரை சென்று நின்றதையும், அவரது ஆடி கார் மற்றும் சொகுசு பங்களா சில விஐபி மகன்களுடன் சித்ராவிற்கு ஏற்பட்ட பழக்கத்தால், அவர்கள் செல்வாக்கை பயன்படுத்தி வாங்கியது என்றும் இதற்கான இஎம்ஐ போன்றவை மட்டுமே செலுத்தி வந்ததாக தெரிவித்தார்.

ஆனால் இந்த தகவலை சித்ராவின் தாயார் விஜயா அடியோடு மறுத்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.