மதில் விழுந்து சிறுவன் சாவு! – மட்டக்களப்பு அறபாநகரில் சோகம்

மட்டக்களப்பு மாவட்டம், கோறளைப்பற்று மத்திய பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள அறபாநகர் கிராமத்தில் மதில் விழுந்து சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது என வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

வாழைச்சேனை, நாசீவந்தீவைச் சேர்ந்த சிறுவன், தனது தாய் தொழில் நிமிர்த்தம் சவூதி அரேபியாவுக்குச் சென்ற நிலையில் அறபாநகர் பகுதியிலுள்ள தனது சகோதரியின் வீட்டில் வசித்து வந்த நிலையில் எதிர்வீட்டு மதில் சுவரைப் பிடித்து ஏறுவதற்கு முயற்சித்தபோது மதில் சிறுவன் மேல் விழுந்துள்ளது. இந்தநிலையில் குறித்த சிறுவனை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

வாழைச்சேனை நாசீவந்தீவு முருகன் ஆலய வீதியைச் சேர்ந்த கோபால் பிறேமசாந் என்ற 13 வயது சிறுவனே குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார் எனப் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுவனின் சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் வாழைச்சேனைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்று வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மேலும் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.