கிளிநொச்சி கல்மடு பிரதேசத்தில் உயிரிழந்த நிலையில் யானை.

கிளிநொச்சி கல்மடு பிரதேசத்தில் உயிரிழந்த நிலையில் யானை பிரதேச மக்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இரவு குறித்த பகுதிக்கு வந்த காட்டு யானை வயலை உணவாக்கி அழித்துள்ளதுடன், அப்பகுதியில் உயிரிழந்துள்ளது.

இன்று காலை வயல் நிலத்தை பார்வையிட சென்ற பொது மக்கள் யானை உயிரிழந்திருப்பது தொடர்பில் கிராமசேவையாளர் ஊடாக வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

உயிரிழந்த யானை தந்தந்துடன் காணப்படுவதுடன், மக்கள் அதனை பார்வையிட்டு வருகின்றனர். குறித்த பகுதி அடர் காட்டினை அண்மித்த பகுதி என்பதும் குறிப்பிடத்தக்கது.

யானை உயிரிழந்தமை தொடர்பான மேலதிக விசாரணைகளை வன ஜீவராசிகள் திணைக்களம் ஆம்பகட்ட விசாரணைகயில் நெல்வயல்களுக்கு வந்த யானையை சட்டவிரோதமாக வயல்நிலங்களுக்கு மின்சார கம்பிவேலியை போட்டமையால் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கலாம் என்று வன ஜீவராசிகள் திணைக்கள் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

யானையின் தும்பிக்கையில் மின்சாரம் தாக்கியமைக்கான அடையாளங்கள் காணப்படுகின்ற போதும் யானையின் உடல்கூற்று பரிசோதனையில்தான் சரியான முடிவுகள் கூறமுடியும் எனவும் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.