கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கலைஞர் தரிசிப்பு நிகழ்ச்சி.

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கலைஞர் தரிசிப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தினால் வருடந்தோறும் நான்கு பிரதேச செயலர் பிரிவுகளிலும் கலைத்துறைக்கு தம்மை அர்ப்பணித்துச் சேவையாற்றிய பத்துக் கலைஞர்கள் வீதம் நாற்பது கலைஞர்கள் தெரிவு செய்யப்பட்டு மாவட்டக் கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலைஞர்கள் ஆகியோர் குழுவாக அவர்களது வீடுகளுக்குச் சென்று நட்புறவாக அவர்களுடன் கலந்துரையாடி அவர்களது கலைச்சேவையினைப் பாராட்டிக் கௌரவிப்பதுடன் 3000.00 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் என்பவற்றினை வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில் கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேச செயலர் பிரிவில் கலைஞர் தரிசிப்பு நிகழ்வு இடம்பெற்றது.

Leave A Reply

Your email address will not be published.